Posts

Annapoorani Birthday

Image
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் புன்னகை மலரால்  கூந்தலை கொள்ளையடித்தவளே!! திருடியாய் அல்ல ; தீரா காதலால்!! நறுமணம் கமழும் எம் நாயகியே!! என் வாழ்வில் மலரும் தருணம் உன்னிடத்திலே!! இலவசமாய் கிடைத்த பரிசே!! என்ன சித்தம் செய்தாயடி எம் உள்ளத்திலே!!! நின் பார்வையில் நான் பரிதவிப்பேனாக!!            -----அன்பான அன்னபூரணியே 

Jasmine Birthday

Image
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மல்லிகை மணமாய் அவதரித்த எம்நாயகியே!!!  மாணிக்க வீணையாய் இசைமீட்ட வந்தவளே!!  எவருமில்லை இவ்வையகத்தே  நின்மணம் பரப்ப தியாகத்தின் மறுஉருவாய் இன்பத்தின் எல்லையாய் அழைக்கா!! இதயத்தின் அன்னையானாய் அல்லவா?   நிதர்சனமாய் நீயின்றி எமக்கேது வளர்ச்சியே!!  உன்னோடு பயணித்த பேரின்ப நாட்களே யாம் பெற்ற பெரும்பேறு  எந்நாளுமே!!  யுகங்கள் கடந்தாலும் அகங்கள் ஒன்றாக காத்திருக்கிறேன் நின் அழைப்பிதலுக்காக ஆவலோடு அல்லாவின் ஆசியோடு எந்நாளும் துடிப்பாயாக!!!          -------------------------- என் தங்க 💐ஜாஸ்மின் ரிஸ்வானாவிற்காக💐  

Anu Birthday

Image
என் அனுவிற்காக  வெள்ளரி பூவாய் வந்தாய் எம் வாழ்விலே!!  வேப்பம் பூவாய் களைந்தாய் அல்லலை!!  உள்ளக் கோயிலில் நிறைந்தாய் அன்னையாய்!!  ஊமை விழிகள் கவிழ்கின்றன நின் வனப்பு வசந்தத்திலே!!

அன்னைக்கு வாழ்த்து

        பிறந்தநாள்   மதுரை மாநகரில் நீயோ எம்பெருமானின்  மனையாளாய்! இருப்பினும் ஈசன் குடியிருப்பில் சிவப் புதல்வனை கண்ணாளனாய் கரம்  பிடித்தவளே!! இரு செல்வத்தை ஈன்று  என்றும் முடிவிலாஆனந்த நயம்புரிவாயாக!!  அடைமழையில் அவதரித்த அன்பு அன்னையே!!  நீரில் தோற்காத கயல் போன்ற  விழிகளை பெற்றதாயே!! நீ ஈன்றெடுக்கா  புதல்வியின் இன்ப வாழ்த்துக்கள் நின்  பிறவியின் பொருட்டு

Birthday

பிறந்தநாள்  உடலும் உயிரும் ஒன்றிய தோற்றத்தில் ஊமை மொழியை தனக்கென கொண்டவனே!!  கருவிழி சுழற்சியால் காந்ததன்மை கொண்டும் பார்வைக்கு பாலகனாய் அவதரித்த நாயகனே!!  பத்து திங்கள் பார்த்திடாத நாட்களே நின் பாசம் அறியா பேதையானேனே!!  என்றும் பல்லாண்டு இன்புற்று இவ்வையகம் ஆள நின் உடன்பிறவா சகோதரியின் உடன்பிறந்த வல்லமை மிக்க வாழ்த்துக்கள்🎉🎊    அன்பு அண்ணன் சஞ்சய், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. 

நண்பர்கள் தினம்

Image
                நண்பர்கள் தினம்   அன்பு தோழர்களே !! அவா நெஞ்சங்களே !! ஆசை ஊற்றில் தெளிந்த நீராக கவலை துவாரத்தை காற்றால் நிரப்புகிறாயே அந்தமில்லா மணித்துளிகளில் முதற் புள்ளியாக முடிவின்றி நகர்வதும் நீங்கள் தானே!! வேரின்றி தழைத்த விருட்சமாகியஎன்னை உரமாக அவதரித்து உயிர்கொடுத்தாயே!!! தனியுடைமை அல்லாது பொதுவுடைமையாய் நட்பு வேட்கை தணிக்கிறாயே? அன்னை உணர்வும் உள்ளத்தில் பணக்காரணாக தோற்றத்தில் ஏழையாய் காட்சிறளிக்கிறாயே இமை சொட்டும் நேரத்தில் விழி மழைத்துளியை மொழியில் அடக்கி வியப்பில் ஆழ்த்துகிறாய் தானே!! விண்ணோடு முகிலாய் மண்ணோடு நறுமணமாய் உன்னோடு பயணமாக நம்மோடு நட்பாக வாழ்வோடு வளமாக செழித்து தரணி ஆள்வோமாக!!!

Brother's day

Image
BROTHER'S DAY  கரிசல் மண்ணில் காளையாய் உருவெடுத்து கையகத்தில் காலத்தை  அடிமையாக்கி அஞ்சா சிங்கமாய் இருந்தும் பாசப் பாலில் வடிகட்டிய  தேநீராய் நின்வளர்ச்சியை தூண்டுகிறாயே!! இமய உயரத்தில் நீ எனக்கு  இயற்கையானாய் அல்லவா?உன் அன்பிற்கு நிகரேதுமில்லை இப்பிணி  உலகில்!! இருப்பினும் ஏங்காத நாளில்லை உடன்பிறவில்லை என்றே!!  அனைத்தும் ஆன நீ தந்தையாகவும் தென்படுகிறாயே இம்மங்கிய  விழிகளுக்கு சிந்தனை கற்களை சிற்பமாக்கி அறிவுச்சுடரை அருள்புகுத்தி  கடவுளாய் உலா வரும் நாளுக்காக காத்திருக்கிறேன் நின்தங்கையாக!!! உன்னவளின் வரவை எண்ணி நோன்பு புரிகின்றேன் அண்ணி  அவதாரத்திலே!!!!                                                                                              எம் சகோதர்களுக்கு அர்பணம்...